வியட்நாமில் வெள்ளம் – 18 பேர் மாயம்!

Date:

வியட்நாமில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதில் சிக்கி 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வியட்நாமின் மத்திய பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருவதுடன் ,வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.சுமார் 780 ஹெக்டேர் அளவிலான பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்டெடுக்கும் பணிகளில் மீட்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந் நிலையில் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் உயிரிழந்ததாகவும் ஊகிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிகழ்ந்த மண்சரிவில் சிக்கி 378 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...