Breaking News: இந்திய ராணுவ தலைமை அதிகாரி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது!

Date:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்ற போது ஒரு ஹெலிகொப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியுள்ளது.குறித்த ஹெலிகொப்டரில் முப்படைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எதுவும் உறுதியாக பதிவாகவில்லை.

ஹெலிகொப்டர் வீழ்ந்த இடத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.4 சடலங்கள் இதுவரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ,3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரில் 14 பேர் பயணம் செய்ததாகவும் அதில் 4 இராணுவ உயர் அதிகாரிகள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...