Breaking News: இந்திய ராணுவ தலைமை அதிகாரி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது!

Date:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்ற போது ஒரு ஹெலிகொப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியுள்ளது.குறித்த ஹெலிகொப்டரில் முப்படைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எதுவும் உறுதியாக பதிவாகவில்லை.

ஹெலிகொப்டர் வீழ்ந்த இடத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.4 சடலங்கள் இதுவரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ,3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரில் 14 பேர் பயணம் செய்ததாகவும் அதில் 4 இராணுவ உயர் அதிகாரிகள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...