அரச விருது பெற்றார் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர்! 

Date:

சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச தேசிய விருதினை நேத்ரா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் பெற்றுக் கொண்டார்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச தொலைக்காட்சி ஆலோசனைக்குழுவின் ஏற்பாட்டில் 15ஆவது வருடமாக இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான தொலைக்காட்சி கலை விருது வழங்கும் விழா கடந்த 29ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் தொலைக்காட்சியில் சிறந்த தமிழ் செய்தி வாசிப்பாளருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச தேசிய விருதினை நேத்ரா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் பெற்றார்.

2019 ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மதிப்பீடு செய்யப்பட்ட வேளை, தொலைக்காட்சியில் சிறப்பாக செய்திகளை முன்வைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...