உலகின் அதி சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா!

Date:

நாசா உலகின் அதி சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

பால்வெளி மற்றும் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் நோக்கில் உலகின் அதிக சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா அனுப்பியுள்ளது.பிரென்ச் கயானாவின் கூரு விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏரியன் ரொக்கட் மூலம் அனுப்பப்பட்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி , புவியிலிருந்து சுமார் 15 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

விஞ்ஞானிகளின் முப்பது ஆண்டுகளாக உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கியை கட்டமைகாக சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.மேலும் 21 அடி விட்டம் கொண்ட பிரம்மாண்ட கண்ணாடியுடன் விண்வெளி பயணத்தை ஆரம்பித்த இந்த தொலைநோக்கி , ஒரு மாதத்தில் நிறுத்தப்படுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இத் தொலைநோக்கியின் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களையும் அதில் உள்ள உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளையும் கண்டறியலாமென விஞ்ஞானிகள் நம்பியுள்ளனர்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://api.nationalgeographic.com/distribution/public/amp/science/article/at-long-last-the-james-webb-space-telescope-is-ready-to-launch&ved=2ahUKEwix0KSf3oD1AhVwzTgGHTRGA7kQFnoECCYQAQ&usg=AOvVaw2RMHmFvzmlcOxwfKzOnqBh

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...