மடகாஸ்கரில் சரக்குக் கப்பல் கவிழ்ந்து விழுந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 64 ஆக உயர்வு!

Date:

கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

மடகாஸ்கர் வட கிழக்கு கடற்கரை அருகே, சுமார் 138 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் கவிழ்ந்திருக்கலாம் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை செயின்ட்- மேரி தீவுகளுக்கு அருகில் இருந்த பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உயிரிழப்புகள் 64 ஆக உயர்ந்துள்ளதாகவும் காணாமல் போன 24 பயணிகளைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், 50 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...