மடகாஸ்கரில் சரக்குக் கப்பல் கவிழ்ந்து விழுந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 64 ஆக உயர்வு!

Date:

கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

மடகாஸ்கர் வட கிழக்கு கடற்கரை அருகே, சுமார் 138 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் கவிழ்ந்திருக்கலாம் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை செயின்ட்- மேரி தீவுகளுக்கு அருகில் இருந்த பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உயிரிழப்புகள் 64 ஆக உயர்ந்துள்ளதாகவும் காணாமல் போன 24 பயணிகளைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், 50 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...