வியட்நாமில் வெள்ளம் – 18 பேர் மாயம்!

Date:

வியட்நாமில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதில் சிக்கி 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வியட்நாமின் மத்திய பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருவதுடன் ,வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.சுமார் 780 ஹெக்டேர் அளவிலான பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்டெடுக்கும் பணிகளில் மீட்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந் நிலையில் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் உயிரிழந்ததாகவும் ஊகிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிகழ்ந்த மண்சரிவில் சிக்கி 378 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...