வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை!

Date:

வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு வழங்க வேண்டிய நிலைவை கொடுப்பனவை வழங்கி மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் ,தாபன சட்ட விதிகளின் படி அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறும் , அவர் கட்டாய விடுமுறையில் இருந்த காலப்பகுதிக்கான கொடுப்பனவை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்.

கருத்தடை சத்திர சிகிச்சை விவகாரத்தில் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளான முஹம்மத் ஷாஃபி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.எனினும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...