கொவிட் பரவல் காரணமாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை – வடகொரியா அறிவிப்பு!

Date:

கொவிட் பரவல் காரணமாக, சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.

இது குறித்து வடகொரியாவின் ஒலிம்பிக் சபை மற்றும் விளையாட்டு அமைச்சகம் சீனாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வடகொரியாவுக்கு எதிரான விரோத சக்திகளின் நகர்வுகள் மற்றும் கொவிட் பரவல் சூழ்நிலை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை எனவும், ஆனால் சீனா நடத்தும் ஒலிம்பிக் போட்டியை முழுமையாக ஆதரிப்போம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூதரக ரீதியில் புறக்கணிப்பது ஒலிம்பிக் போட்டியை அவமானப்படுத்துவது போன்றது எனவும் வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...