டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒழிப்புத்திட்டம்!

Date:

இந்த  ஆண்டின் முதல் ஐந்து நாட்களுக்குள் 1,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், டெங்கு நோயைப் பரப்பும் பிரதான 4 வகையான வைரஸ் வகைகளின், மூன்றாவது வைரஸ் வகையினால் தொற்றுக்குள்ளாகிய டெங்கு நோளாயர்களும் இலங்கையில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின், சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இந்த வேலைத் திட்டம் ஜனவரி 04 முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும். இதற்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகிய, டெங்கு அவதானம் கூடிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...