நாளை மறுதினம் கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

Date:

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (08) 16 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அவசர திருத்த பணிகள் காரணமாக நாளை மறுதினம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என குறித்த சபை அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு தெஹிவளை, கல்கிசை ,கோட்டை மற்றும் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது .இது தவிர கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணி நேரம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...