பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு முதன் முறையாக  பெண் நீதிபதி நியமனம்!

Date:

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு முதன் முறையாக  பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இதற்கு பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று (06) ஒப்புதல் அளித்துள்ளது.

ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீதிபதி ஆயிஷா மாலிக் முன்னணி கார்ப்ரேட் மற்றும் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வந்தார்.பின்னர் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 20 ஆண்டுகள் பணியாற்றி தற்போது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகியுள்ளார்.கரும்பு விவசாயிகளுக்கு கூலி வழங்குதல், தேர்தலில் சொத்து அறிவிப்பு வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...