புத்தாண்டோடு புதியதோர் ஆரம்பத்தை நோக்கி கம்பளை இளம் சமூகத்தினர்!

Date:

இந்த வருட ஆரம்பத்தை முன்னிட்டு கம்பளை பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க கம்பளை வலயத்தில் வறுமை கோட்டின் கீழ் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு Eclat unit அமைப்பின் தலைவர் இஹ்திஷான் முஹம்மட் மற்றும் JJ Foundation அமைப்பின் தலைவர் ஹனீப் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் அம் மாணவர்களுக்கான பாடசாலை புத்தகங்கள் சீருடைகள் மற்றும் சப்பாத்துக்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (01) கம்பளை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதன் போது கம்பளை பொலிஸ் பிரமுகர்களும் அதே போன்று அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர் இதன் போது Eclat unit அமைப்பின் தலைவரின் உரையில் பொலிஸ்கும் மற்றும் மக்களிடையேயான சுமுகமான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்து, Eclat unit அமைப்பின் ஸ்தாபக தலைவர் இஹ்திஷான் முஹம்மட் மற்றும் JJ அமைப்பின் தலைவர் டொக்டர் ஐ.வை.ம்.ஹனீப் ஆகியோரின் தலைமையின் கீழ் இணைந்து வருட ஆரம்பத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம் ஒன்றை கம்பளை ஸாஹிரா கல்லூரி, கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் வட்டதெனிய ஹவுஸ் ஒப் ஹோப் இல்லத்தில் நடத்தியது. இதன் போது சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...