களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்!

Date:

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி இயந்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தேசிய மின்கட்டமைப்புக்கு 150 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் இயந்திரம் ஒன்றே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (19) மின் உற்பத்தி இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் தடைப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று இரவு மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...