கொவிட் பரவல் காரணமாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை – வடகொரியா அறிவிப்பு!

Date:

கொவிட் பரவல் காரணமாக, சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.

இது குறித்து வடகொரியாவின் ஒலிம்பிக் சபை மற்றும் விளையாட்டு அமைச்சகம் சீனாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வடகொரியாவுக்கு எதிரான விரோத சக்திகளின் நகர்வுகள் மற்றும் கொவிட் பரவல் சூழ்நிலை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை எனவும், ஆனால் சீனா நடத்தும் ஒலிம்பிக் போட்டியை முழுமையாக ஆதரிப்போம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூதரக ரீதியில் புறக்கணிப்பது ஒலிம்பிக் போட்டியை அவமானப்படுத்துவது போன்றது எனவும் வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...