சக வாழ்வை பலப்படுத்த உதவும் “பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்” நூல் வெளியீட்டு விழா!

Date:

வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.நவாஸ் (ஸலாமி) எழுதிய ‘பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை 10 மணிக்கு வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வரையறுக்கப்பட்ட மக்கள் சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கலீல் ரஹ்மான் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதன் மற்றும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூலாசிரியரின் கன்னி வெளியீடான இந் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண ஊழியர் சேமலாப நிதியத்தின் மாகாணப்பணிப்பாளர் ஏ.தாஹிர், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஏ.எல்.அமீன், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை பொலிஸ் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...