ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

Date:

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர் சையத் பத்ர் அல் புசைதி ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி ஊடான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கையின் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஓமானில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினருக்கு அந்நாடு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஓமானில் உள்ள இலங்கையர்களின் நலன்புரி மற்றும் நல்வாழ்வுக்காக ஓமான் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என அமைச்சர் அல்பூசைதி இதன்போது உறுதியளித்தார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...