ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

Date:

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர் சையத் பத்ர் அல் புசைதி ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி ஊடான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கையின் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஓமானில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினருக்கு அந்நாடு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஓமானில் உள்ள இலங்கையர்களின் நலன்புரி மற்றும் நல்வாழ்வுக்காக ஓமான் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என அமைச்சர் அல்பூசைதி இதன்போது உறுதியளித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...