டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒழிப்புத்திட்டம்!

Date:

இந்த  ஆண்டின் முதல் ஐந்து நாட்களுக்குள் 1,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், டெங்கு நோயைப் பரப்பும் பிரதான 4 வகையான வைரஸ் வகைகளின், மூன்றாவது வைரஸ் வகையினால் தொற்றுக்குள்ளாகிய டெங்கு நோளாயர்களும் இலங்கையில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின், சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இந்த வேலைத் திட்டம் ஜனவரி 04 முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும். இதற்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகிய, டெங்கு அவதானம் கூடிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...