தனுஷ்க குணதிலக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு (SLC) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது bio-bubble ஐ மீறிய குற்றத்திற்காக குணதிலக தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஜூன் வரை தடை செய்யப்பட்டுள்ளார்.இலங்கை அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள துடுப்பாட்ட வீரர், கடந்த வாரம் தனது ஓய்வுக் கடிதத்தை SLC க்கு கையளித்ததாக அறியக் கிடைக்கிறது .

அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்த பின்னர், குறிப்பாக விளையாட்டின் குறுகிய பதிப்புகளில் தனது உடற்தகுதி நிலைகளில் கவனம் செலுத்தும் வகையில் தான் இந்த முடிவை எடுத்ததாக தனுஷ்க குணதிலக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், குறுகிய பதிப்புகளின் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக குணதிலக்க தெரிவித்துள்ளார்.

“எனது நாட்டிற்காக விளையாடுவது எப்போதுமே ஒரு கெளரவமாகும், மேலும் எதிர்காலத்தில் நான் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் எனது சிறந்த பங்களிப்பை வழங்குவேன் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...