இன்று 15 மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரினால் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டமானது, 40.91 கிலோமீற்றர் நீளம் தூரத்தை கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட இந்த வீதி நகர்ப்புறங்களைத் தவிர்த்து, முக்கியமாக வெற்று நிலங்கள் வழியாகச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
4 வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதியே இலங்கையிலுள்ள மிக அழகிய அதிவேக வீதி பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
https://fb.watch/ayrUxS6cqk/