மேல் மாகாணத்திலுள்ள அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்!

Date:

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (26) காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க எந்த தரப்பினரும் தலையிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு நிர்வாக ரீதியிலான தீர்வுகள் வழங்கப்படாமை குறித்து கவனம் செலுத்தி மாகாண மட்டத்தில் எட்டு வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளோம்.

இந்த அடையாள நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சும் அரசாங்கமும் தலையிட்டு நியாயமான தீர்வுகளை வழங்கும் என்பது எமது நம்பிக்கை என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...