மேல் மாகாணத்திலுள்ள அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்!

Date:

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (26) காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க எந்த தரப்பினரும் தலையிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு நிர்வாக ரீதியிலான தீர்வுகள் வழங்கப்படாமை குறித்து கவனம் செலுத்தி மாகாண மட்டத்தில் எட்டு வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளோம்.

இந்த அடையாள நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சும் அரசாங்கமும் தலையிட்டு நியாயமான தீர்வுகளை வழங்கும் என்பது எமது நம்பிக்கை என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன–மத எல்லைகளை தாண்டிய தன்னார்வ சேவை:சிவில் சமூக அமைப்புகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் சந்திப்பு!

கொழும்பு – இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களின் பின்னணியில்,...

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நீர்த்தடை

அம்பத்தலேயிலிருந்து தெஹிவளை வரை செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட...

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...