2022 ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் இறுதியில் ஆரம்பமாகும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் இரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ஐபில் கிரிக்கெட் போட்டியின் 15 வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், இந்தாண்டு புதிதாக லக்னௌ மற்றும் அஹ்மதாபாத் அணிகள் அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிற நிலையில் போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புவதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விரும்புவதாகவும் ஜெய் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதிகாரப்பூர்வமாக போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.