ஆப்கான் சிறையிலுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரியும், ஹசாரா இனக் குழு பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் பெருமளவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

4 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட மகளிர் சிறை இயக்குனரான அலியா அஸிசியை விடுவிக்கக் கோரிய பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹசாரா இன பெண்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் கொடூரங்களை கைவிடுமாறும் பெண்கள் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாலிபான்கள் விரட்டியுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.uniindia.com/women-protest-in-kabul-against-arbitrary-killings-disappearance-of-women/world/news/2622956.html&ved=2ahUKEwiy0MXcv7j1AhVXTWwGHfVcAZwQFnoECAkQAQ&usg=AOvVaw18palJh7bYoDHQRGgf2yH6

Popular

More like this
Related

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...