கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற எரிவாயு விபத்தை உறுதிப்படுத்திய பொலிஸார்! 

Date:

கடந்த திங்கட்கிழமை (03) கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தி மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதம சமயலறையில் ஏற்பட்ட வாயுக் கசிவே வெடிப்பிற்குக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டங்கன் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டரின் குமிழ் சரியாக மூடப்படவில்லை என்று கூறிய அவர், அதனால் எரிவாயு கசிவு ஏற்பட்டதாகவும், சமையல்காரர் அடுப்பை அணைத்ததால் திடீரென தீப்பற்றியதாகவும் கூறினார்.

திடீரென பரவிய தீயினால் சமையல்காரரின் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் வெடிப்பு ஏற்படவில்லை என்றும் OIC டங்கன் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

தீக்காயங்களுக்கு உள்ளான சமையல்காரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் வெளியேறினார் என்று அவர் மேலும் கூறினார்.ஹோட்டலின் சமையலறையில் காற்றோட்டத்திற்கான ஜன்னல்களோ அல்லது காற்று சுழற்சியோ இல்லை என்பது விசாரணைகளின் போது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...