சக வாழ்வை பலப்படுத்த உதவும் “பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்” நூல் வெளியீட்டு விழா!

Date:

வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.நவாஸ் (ஸலாமி) எழுதிய ‘பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை 10 மணிக்கு வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வரையறுக்கப்பட்ட மக்கள் சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கலீல் ரஹ்மான் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதன் மற்றும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூலாசிரியரின் கன்னி வெளியீடான இந் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண ஊழியர் சேமலாப நிதியத்தின் மாகாணப்பணிப்பாளர் ஏ.தாஹிர், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஏ.எல்.அமீன், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை பொலிஸ் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...