சவூதி அரேபியா ரியாத்திலுள்ள இலங்கையர்களால் ஒட்சிசன் செறிவூட்டிகள் அன்பளிப்பு!

Date:

இலங்கை தூதரகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கையினரின் கலாச்சார மன்றத்தின் ஒருங்கிணைப்பில் சுமார் 1.2 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மினி ஒட்சிசன் செறிவூட்டிகளின் ஒன்பது அலகுகள் இலங்கையின் சுகாதாரப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது .

இந்த மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆதரவுடன் ஒருங்கிணைப்புச் செய்துள்ளது.

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை மக்களின் உயிர்களைக் காக்க உதவும் முகமாக சரியான நேரத்தில் உரிய நன்கொடைகளை வழங்கியமைக்காக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை சமூகம் மற்றும் ரியாத்திலுள்ள இலங்கையின் கலாச்சார மன்றத்தை தூதரகம் பெரிதும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...