தனுஷ்க குணதிலக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு (SLC) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது bio-bubble ஐ மீறிய குற்றத்திற்காக குணதிலக தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஜூன் வரை தடை செய்யப்பட்டுள்ளார்.இலங்கை அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள துடுப்பாட்ட வீரர், கடந்த வாரம் தனது ஓய்வுக் கடிதத்தை SLC க்கு கையளித்ததாக அறியக் கிடைக்கிறது .

அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்த பின்னர், குறிப்பாக விளையாட்டின் குறுகிய பதிப்புகளில் தனது உடற்தகுதி நிலைகளில் கவனம் செலுத்தும் வகையில் தான் இந்த முடிவை எடுத்ததாக தனுஷ்க குணதிலக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், குறுகிய பதிப்புகளின் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக குணதிலக்க தெரிவித்துள்ளார்.

“எனது நாட்டிற்காக விளையாடுவது எப்போதுமே ஒரு கெளரவமாகும், மேலும் எதிர்காலத்தில் நான் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் எனது சிறந்த பங்களிப்பை வழங்குவேன் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...