பாகிஸ்தானில் கடும் பனிப் பொழிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

Date:

பாகிஸ்தானில் சுற்றுலா சென்று கடும் பனிப் பொழிவில் சிக்கி கார்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரீ பகுதிக்கு ஆயிரக்கணக்கான கார்களில் சுற்றுலா சென்ற மக்கள், கடும் பனி பொழிவில் சிக்கி திரும்ப முடியாமல் ஸ்தம்பித்து போனதாக கூறப்படுகிறது.

கடும் குளிரிலிருந்து தப்பிக்க கார் கண்ணாடிகளை மூடியதால் மூச்சுத் திணறல் மற்றும் உறை பனி குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கார்களில் இருந்து 10 குழந்தைகள் உட்பட 22 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பனியில் சிக்கிக் கொண்ட ஆயிரத்து 122 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...