பாகிஸ்தானில் கடும் பனிப் பொழிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

Date:

பாகிஸ்தானில் சுற்றுலா சென்று கடும் பனிப் பொழிவில் சிக்கி கார்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரீ பகுதிக்கு ஆயிரக்கணக்கான கார்களில் சுற்றுலா சென்ற மக்கள், கடும் பனி பொழிவில் சிக்கி திரும்ப முடியாமல் ஸ்தம்பித்து போனதாக கூறப்படுகிறது.

கடும் குளிரிலிருந்து தப்பிக்க கார் கண்ணாடிகளை மூடியதால் மூச்சுத் திணறல் மற்றும் உறை பனி குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கார்களில் இருந்து 10 குழந்தைகள் உட்பட 22 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பனியில் சிக்கிக் கொண்ட ஆயிரத்து 122 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...