யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் திருவிழா

Date:

NEWS NOW:- யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் திருவிழா கலாநிதி சிதம்பரம் மோகன் தலைமையில் யாழ். நெல்லை ஆதினா மண்டபத்தில் (14) வெகு சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மேஜர் ஜெனரல் செனரத் யாபா விசேட அதிதியாகவும் சர்வமதத் தலைவர்கள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான வண.பிதா கலாநிதி எஸ்.சந்ரு பெர்னாண்டோ ஆசி உரை வழங்கினார்.
வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம் இந்தியன் துணை தூதரகத்தின் பதில் தூதுவர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...