ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை

Date:

NEWS NOW:-ரோட்டரி இலங்கை மாவட்ட – 3220 ஆளுநர் அருணி மலலசேகர (Aruni Makakasekara ) 15-01-2022 அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.

ஆளுநரின் ஆளுநரின் துணை செயலாளர் ஜெயக்குமார் அவர்களும் மற்றும் உதவி. ஆளுநர் டாக்டர் கருணாகரனும் அவருடன் இணைந்து கொண்டார்கள் .

திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் – த அகிலன் விருந்தினர்களை வரவேற்று, வரவேற்புரையை நிகழ்த்தினார் .
செயலாளர் க பிரபாகரனால் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

தி / ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வெற்றியாளர் செல்வி எம். அகன்ஷா அவர்களுக்கு ரொக்க விருது மூலம் பாராட்டப்பட்டு கௌரவிக்கப் பட்டார்.

தலைவர் அகிலனால் புல் வெட்டும் இயந்திரம் ஓன்று திரு வேலாயுதம் அவர்களுக்கு வழங்கப் பட்ட்து.

தி / கணேச வித்யாலயம் & தி / தங்கபுரம் பாடசாலையின் தலைமையாசிரியர்கள் “கிராமப் பள்ளிகளுக்கு கணனி” என்ற திடடத்தின் கீழ் கணனிகளைப் பெற்றுக் கொண்டனர். மேலும் 6 பாடசாலைகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப் படும்.

ஆளுநரின் துணை செயலாளர் ஜெயக்குமார் அவர்களால் மாவட்ட ஆளுநர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஆளுநர் அருணி மலலசேகர, தமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். புதிய திட்ட்ங்களை உருவாக்கி மக்களுக்கு சிறந்த சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் ரோட்டரி பெயரைஎடுத்து செல்லவேண்டும்  என எடுத்துரைத்தார்

2022-2023 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட திரு .கிட்டினதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...