இந்தியாவுடனான டி 20 சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!

Date:

இந்தியாவுடனான மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதிக்காக இந்த பட்டியலை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.

சுற்றுப்பயணத்தின் போது மற்றும் வனிந்து ஹஸரங்க மற்றும் பினுர பெர்னாண்டோர் ஆகிய வீரர்களுக்கு கொவிட் உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில் தற்போது குணமடைந்துள்ள அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது உபாதைக்குள்ளான அவிஸ்க பெர்ணான்டோ, நுவன் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...