எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த போதிய பணம் இல்லை:உதய கம்மன்பில

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று எரிபொருள் கப்பல்களை விடுவிப்பதற்கான போதிய நிதி அரசாங்கத்திடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஒரு எரிபொருள் கப்பலுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு மட்டுமே அரசாங்கத்திடம் பணம் இருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு கப்பலில் இருந்து பெற்றோலை இறக்குவதற்கு பணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், டீசல் மற்றும் எரிபொருளைக் கொண்ட மற்ற இரண்டு கப்பல்களை விடுவிக்க போதிய நிதி இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எரிபொருளை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் அமெரிக்க டொலர்கள் இல்லையெனவும் இதனால் இலங்கையில் எதிர்வரும் காலங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மேலும் குறிப்பிட்ட அவர், எரிபொருள் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னர் ஒரு எரிபொருள் நிலையத்துக்கு மூன்று எரிபொருள் பவுசர்கள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்போது ஒன்று அல்லது இரண்டு எரிபொருள் பவுசர்கள் மட்டுமே அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...