இலங்கையில் பால் உற்பத்தித் திட்டத்திற்கு அமெரிக்கா உதவி!

Date:

இலங்கையில் பால் உற்பத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் உதவி வழங்கியுள்ளது.

அதேநேரம், பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களின் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக 2024 செப்டம்பர் மாதம் வரை தேவையான நிதியை வழங்க அமெரிக்க விவசாயத் துறை ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் 38 அரசு மற்றும் தனியார் துறை பால் உற்பத்தியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களின் திறன் மேம்பாட்டு திட்டங்களை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமெரிக்காவின் விவசாய திணைக்களத்திற்கும் இலங்கையின் விவசாய அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...