இலங்கையுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் முக்கியத்துவம் அளிக்கும்: பாக். பிரதமர் இம்ரான் கான்

Date:

நம்பகமான உறவு என்ற வகையில் இலங்கையுடனான தனது உறவுகளுக்கு பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அண்மையில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவை சந்துத்து பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 2021 இல் தனது இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான சகோதரத்துவ உறவுகளை வலுப்படுத்தவும் அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை விரிவாக மேம்படுத்தவும் பாகிஸ்தானின் விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கைத் தலைமையின் பாகிஸ்தான் விஜயத்தை எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் இம்ரான் கான் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்-இலங்கை உறவுகளில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒரு முக்கிய அங்கமாக இருந்ததாகவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான காரணியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான கூட்டுறவு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன் சர்வதேச மற்றும் பிராந்திய அரங்குகளில் பாகிஸ்தானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

பகிரப்பட்ட இலக்குகளை மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...