ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி விடுதலை!

Date:

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெர்னாண்டோ நிரபராதியாக கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுவிக்கப்பட்டார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளையடுத்து முன்னாள் அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த போதிலும் ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மீது குற்றவியல் புறக்கணிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக மொத்தம் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்நிலையில், ஹேமசிறி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் நீதியரசர்களான நாமல் பலாலே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரால் அவரை விடுவிப்பதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...