உக்ரைன்- ரஷ்யா போர் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும்: வெளிவிகார அமைச்சு

Date:

ரஷ்யா – உக்ரைனில் இடம்பெற்று வரும் போர் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு நிலவும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உக்ரைனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம் +90 534 456 94 98, +90 312 427 10 32/ மின்னஞ்சல்: slemb.ankara@mfa.gov.lk.

உக்ரைன் தலைநகர் கீவ் அல்லது அதைச் சுற்றிலும் பல குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகரில் குறைந்தது ஒரு அடுக்குமாடி கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...