உக்ரைன்-ரஷ்யா போர் Updates; ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை!

Date:

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின் இலக்கு உக்ரைன் மாத்திரமல்ல, ஐரோப்பாவின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதும் தான் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உருசுலா வாண்டர் லியன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐரோப்பாவில் போர் வருவதற்கு காரணம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் என்றும்,போரால் ஏற்படும் இழப்புகளுக்கு ரஷ்யாவே பொறுப்பேற்கச் செய்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் மக்களுக்கும் துணை நிற்பதாக உறுதியளித்த அவர் ரஷ்யப் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்யும் வகையில் அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து பேசிய பின் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும், ஐரோப்பிய நிதிச் சந்தையில் ரஷ்ய வங்கிகளுக்கான வணிகத் தொடர்பை நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...