கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சமூக ஆர்வலர்களுக்கான பாராட்டு விழா!

Date:

கம்பஹா கல்வி வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்துக்காக செயற்பட்டுவரும் கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் இரண்டு வருட நிறைவை முன்னிட்டு சமூக ஆர்வலர்களைப் பாராட்டும் விழாவும், 2022 ஆம் வருடத்துக்கான செயற்திட்ட முன்வைப்பு நிகழ்வும் கடந்த ஞாயிறு (20) திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவரும், கம்பஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களுக்கான தமிழ் மொழி மூல பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு. M.T.M. தெளஸீர் நளீமி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் இம் மன்றத்தின் பணிகளுக்கு பங்களிப்புச் செய்த அனுசரணையாளர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் செயலாளரும் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் அதிபருமான திரு. M.A.M. அஸாமின் நிகழ்ச்சி நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற இவ் விழாவில் கம்பஹா வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

உடுகொட அரபா மகா வித்தியாலய ஆசிரியர் திரு. M.M.M. முஹிதீனின் கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவின் வரவேற்புரை குமாரிமுள்ள முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் திரு. M.K.R. முஹம்மதினால் நிகழ்த்தப்பட்டது. கம்பஹ கல்வி அபிவிருத்தி மன்றத்தின் இரு வருட கால சாதனைகளை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் திரு. M.A.M.M. அஸ்மிர் முன்வைத்ததோடு, அதன் 2022 ஆம் ஆண்டுக்கான அமுலாக்கல் திட்டத்தை அதன் தலைவர் சபைக்கு சமர்ப்பித்தார். இறுதியாக கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய அதிபர் திரு. M.M.M. ஸர்ஜூனின் நன்றியுரையோடு விழா நிறைவு பெற்றது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...