சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று வாக்கு மூலம்!

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று (12) வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சஹ்ரான் ஹசீமின் மனைவி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வாக்கு மூலம் வழங்க அனுமதிக்குமாறு விசேட புலனாய்வுப் பிரிவினர் கடந்த 10 ஆம் திகதி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதன்படி குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

மேலும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சென்று உரிய வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ஜனனி வீரதுங்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...