சோமாலியாவில் குண்டு வெடிப்பு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

Date:

சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர்
நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Beledweyne நகரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணவு அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத் தாக்குதலுக்கு al Shabaab என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த 13பேரில் ஒருவர் அந் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆவார்.

இந்த தாக்குதலில் 18க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். சோமாலியாவில் வருகிற 25 ஆம் திகதியுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...