பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கொழும்பில் கையெழுத்து போராட்டம்!

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கொழும்பில் கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் கொழும்பு புறக்கோட்டையில் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதவற்கான கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொழும்பிலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை   இந்தக் கையெழுத்து  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தின் நன்மை கருதி அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...