மேற்கிந்திய தீவுகள் அணியை வெள்ளையடிப்பு செய்து கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

Date:

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 17 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
.

185 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்திய அணியின் பந்து வீச்சில் ஹெர்ஷல் பட்டேல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வய்ட்வொஷ் முறையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...