மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை அமைப்பதற்காக குவைத்திடமிருந்து ரூ.6.6 பில்லியன் கடன்!

Date:

மருத்துவ விஞ்ஞானத்தில் உயர்கல்விக்கான தரம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் மனித மூலதனம், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டில் உள்ள மருத்துவ சேவை நிபுணர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்று நிறுவப்படவுள்ளது.

இந்நிலையில், அரபு பொருளாதார வளர்ச்சிக்கான குவைத் நிதியம் (KFAED) குவைத் தினார் படி 10 மில்லியன் (இலங்கை ரூபாய் 6,600 மில்லியன் ரூபாய்) கடனாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்புடைய கடன் ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியன்று கொழும்பு நிதி அமைச்சில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல மற்றும் குவைத் அரபு பொருளாதார மேம்பாட்டுக்கான நிதியத்தின் சார்பாக பிரதி பணிப்பாளர் நாயகம் நேதால் ஏ.அல் ஒலயன், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். பு தைர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

களுத்துறை நாகொடையில் உள்ள போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்த மருத்துவ பீடத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய கட்டிடங்கள் வளாகம், மருத்துவ பீடத்திற்கான பிற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி தளபாடங்கள் மற்றும் கருவிகள், ஆய்வக உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய பிற பொருட்களை வழங்குதல் ஆகியவை இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2022-2026 காலகட்டத்தில் கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...