“ரஷ்யாவின் படைகளில் ஒரு பகுதி உக்ரைன் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை”-ஜோ பைடன்!

Date:

ரஷ்யாவின் படைகளில் ஒரு பகுதி உக்ரைன் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை ரஷ்யா உக்ரைன் மற்றும் பெலாரசை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடியாக மோத விரும்பவில்லை என்ற போதும் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்றும் பைடன் எச்சரித்துள்ளார்.

போர் மூண்டால் சர்வதேச அளவில் ரஷ்யா கடும் கண்டனத்தை சந்திக்க நேரிடும் என்றும் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் பாதிப்பு அமெரிக்காவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றில் எதிரொலிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...