இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படையினருக்கு பதவி உயர்வு!

Date:

இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படையை சேர்ந்த 175 அதிகாரிகள் மற்றும் 2,338 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று முதல் அமுலுக்கு வருவதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாய் நாட்டுக்காக இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேசத்தின் 74 வது தேசிய சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதியுடன் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் 480 அதிகாரிகள் மற்றும் 8,034 சிப்பாய்களுக்கான நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 7 சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 16 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 36 லெப்டினன் கேணல்கள் கேணல் நிலைக்கும், 50 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும் 207 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 94 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும், 70 இராண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் நிலை உயர்த்தப்பட்டுள்ளனர். இந் நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வா 2019 ஓகஸ்ட் 18 ஆம் திகதி இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் இலங்கை இராணுவத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நான்கு இலக்க நிலை உயர்வுகளை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டார்.

73 ஆண்டுகால வரலாற்றில் முன்பு இல்லாத வகையில் 18 ஆகஸ்ட் 2019 க்குப் பிறகு இன்று வரை 4,341 அதிகாரிகள் மற்றும் 86,741 சிப்பாய்களுக்கு நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...