ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மற்றும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாகவும் அதன் மூலம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கான ஐ.நாவின் அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.