உக்ரைன்- ரஷ்யா போர் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும்: வெளிவிகார அமைச்சு

Date:

ரஷ்யா – உக்ரைனில் இடம்பெற்று வரும் போர் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு நிலவும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உக்ரைனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம் +90 534 456 94 98, +90 312 427 10 32/ மின்னஞ்சல்: slemb.ankara@mfa.gov.lk.

உக்ரைன் தலைநகர் கீவ் அல்லது அதைச் சுற்றிலும் பல குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகரில் குறைந்தது ஒரு அடுக்குமாடி கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...