‘எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கே தான் இருக்கிறோம்’: உக்ரைன் ஜனாதிபதி வீடியோ வெளியீடு

Date:

‘நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம். எங்கள் இராணுவம் இங்கே உள்ளது. நாங்கள் அனைவரும் இங்கு எங்கள் சுதந்திரத்தையும், நாட்டையும் பாதுகாக்கிறோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தலைநகரில் தலைமைத் தங்கி பாதுகாப்பதாக முக்கிய உதவியாளர்களுடன் சபதம் செய்து வெள்ளிக்கிழமை மத்திய கீவ் நகரில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இதன்போது, ‘நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம். எங்கள் இராணுவம் இங்கே உள்ளது. சமுதாயத்தில் குடிமக்கள் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் இங்கு எங்கள் சுதந்திரத்தையும், நாட்டையும் பாதுகாக்கிறோம், அது அப்படியே இருக்கும், ‘என்று ஜெலென்ஸ்கி ஜனாதிபதி கட்டிடத்திற்கு வெளியே நின்று கூறினார்.

உக்ரைன் மீது கடந்த 24 ஆம் திகதி ரஷ்யா இராணுவப் போர் நடவடிக்கையை தொடங்கியது. முதல் நாளிலேயே வான்வழிக் கட்டமைப்பை கையகப்படுத்தியது.

இரண்டாவது நாளான நேற்று உக்ரைனுக்குள் தரை வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. செர்னோபில் அணு உலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

துறைமுக நகரங்களை சுற்றிவளைத்து உக்ரைனுக்கு கடல்வழியாக உதவிகள் கிடைக்காமல் முடக்கியது.

நேற்று மாலை கீவ் நகரிலிருந்து மூன்று மைல் தொலைவில் முகாமிட்ட ரஷ்யப் படைகள் அரசுப் பணியாளர்கள் குடியிருப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு இசைவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...