கர்நாடகா ஹிஜாப் விவகாரம்: இந்திய முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக குவைத் மக்கள் போராட்டம்!

Date:

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து குவைத்திலுள்ள இந்திய தூதரகம் முன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் அரபிகள், உட்பட ஆண், பெண் எனப்பலரும் பங்கேற்றதுடன் குவைத் பாராளுமன்றமும் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக ‘இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவு’ இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சுமார் 120 பேர் கலந்துகொண்டதுடன் இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் துன்புறுத்தப்படுவதை நிராகரிப்பதையும் மறுப்பதையும் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் ஹிஜாப் அணிந்த மாணவர்களுக்கு எதிராக என்ன நடக்கிறது? என்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் சிலர் கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம் பெண்களுக்கு எதிரான இத்தகைய நடைமுறைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் மௌனமாக இருப்பதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை’இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடப்பது தெளிவான அநீதி, ஒருவருடைய மத நம்பிக்கையை விட்டுவிடுமாறு பிறரை வற்புறுத்துவது ஒரு நபரின் உரிமை அல்ல’ என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ‘மத பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, இந்திய அரசாங்கம் முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள அதன் நாட்டினரை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவர்கள் மிகப்பெரிய சமூகங்களில் ஒன்றாகும் மற்றும் அவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில் முழு சுதந்திரம் உள்ளது,என்று குவைத் வழக்கறிஞரும் அரசியல் ஆர்வலருமான இஸ்ரா அல்-மதூக் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...