பேராயர் மெல்கம் ரஞ்சித் இன்றையதினம் திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்களை சந்தித்து பேசவுள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று நம்பபத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய அவர்கள் ரோம் நேரப்படி காலை 11 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் குறித்து தேவாலயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.